கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் தேவர்முக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கவ்ராஜன்(40). விவசாயியான இவர், தனது டூவீலரை தோட்டத்தில் நிறுத்திவிட்டு விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர், டூவீலரை திருடிச்செல்ல முயன்றார். இதனை பார்த்த கவ்ராஜன் அங்கிருந்தவர்களின் உதவியுடன், அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர், காவேரிப்பட்டணம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கும்பாரஅள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.