இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அஸ்வத்தாமன் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜாரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, நிபந்தனையுடன் அஸ்வத்தாமனுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 4 வெள்ளிக்கிழமைகளில் நாகூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். எதிர்காலத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கும்போது வெறுப்பு பேச்சு பேசமாட்டேன் என்ற உத்தரவாதத்தை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.