திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது மேலும் இரு வழக்கு


பழநி: திரைப்பட இயக்குனர் மோகன் ஜி பேசி சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், நமக்கு தெரிந்த கோயில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாக செவிவழி செய்தியாக கேள்விப்பட்டேன் என பேசினார். இதுதொடர்பாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை மேலாளர் கவியரசு அளித்த புகாரின்பேரில், சமயபுரம் போலீசார் மோகன் ஜியை சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் அவர் திருச்சி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்கு பிறகு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலைய கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரின்பேரில், மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் 6 பேர் கைது

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்