ரயில் மோதி இருவர் பலி

பூந்தமல்லி: ஆவடி, அண்ணனூர் ரயில் நிலையம் இடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரயில் செல்லும் இருப்பு ரயில் பாதை உள்ளது. இங்கு, நேற்று மதியம் 2.40 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், ஆவடி அண்ணனூர் ரயில் நிலையம் இடையே அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பாதையில் சுமார் நேற்று மதியம் 3 மணி அளவில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை