சென்னை தண்டையார்பேட்டையில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலில் பயணியிடம் செல்போன் பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவு ரயிலில் சென்னை வந்த ஆந்திராவை சேர்ந்த பூனாராவ் என்ற பயணியிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. சிக்னலுக்காக ரயில் காத்திருந்தபோது ஜன்னல் வழியாக கையை விட்டு பயணியின் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. செல்போன் பறிப்பில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையை சேர்ந்த பரத், பாபு ஆகியோரை ரயில்வே போலீஸ் கைது செய்தது.
ரயிலில் செல்போன் பறித்த இருவர் கைது
previous post