சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்ட்ரல் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஜிஹோசியா மிஷல், பினுவல் பெய்க் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.