இரட்டை சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலை

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சண்முகம்(40). இவருக்கு பாமா(34), ருக்மணி(34) உள்பட 4 சகோதரிகள். இதில் இரட்டையர்களான பாமா, ருக்மணி தவிர மற்ற 2 சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. கூலித்தொழிலாளியான சண்முகமும் திருமணம் செய்யாமல் சகோதரிகளுடன் வசித்துள்ளார். இந்நிலையில் 34 வயதாகியும் தங்களுக்கு திருமணமாகாமல் அண்ணனுக்கு பாரமாக இருப்பதாக நினைத்து இரட்டை சகோதரிகள் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் இருவரும், கடந்த 30ம்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். உறவினர்கள் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்