நேற்று முன்தினம் வழக்கம்போல படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென நடிகைகள் ரஞ்சினி மற்றும் சஜிதா பேட்டி ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது.தகராறு முற்றி கைகலப்பு வரை சென்றது. அதிர்ச்சியடைந்த டைரக்டர் மற்றும் கலைஞர்கள் விரைந்து செயல்பட்டு அவர்களை விலக்கினர்.இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த டிவி தொடரின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் ஆகியோர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இருவரும் சமரசம் செய்ய முன் வராததால் அன்றைய படப்பிடிப்பு முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு நேற்று மீண்டும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் ஆகியோர் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மதியத்திற்குப் பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.