மும்பை: ஓட்டலில் கண்ணாடியை உடைத்த நடிகையில் கையில் காயம் ஏற்பட்டதால், அவர் தற்போது மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை ஆர்த்தி சிங், மும்பை மருத்துவமனையில் இருந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த சில தினங்களுக்கு முன், எனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு சென்றேன். இரவு நேரத்தில் அங்கு சென்ற போது, அங்கிருந்த கண்ணாடியை கையால் குத்தினேன். எதிர்பாராத விதமாக கண்ணாடி உடைந்து அதன் துண்டுகள் எனது கையில் காயத்தை ஏற்படுத்தியது, மேலும் அதன் துகள்கள் கைக்குள் சென்றுவிட்டன. அப்போது எனக்கு அது தெரியவில்லை.
ஆனால் அன்றிவு இரவு முழுவதும் வலியால் அவதிப்பட்டேன். வலி தாங்க முடியாததால் அடுத்த நாள் காலை மருத்துவரிடம் சென்றேன். அவர் பரிசோதனை செய்த பின், என் கையில் 7 கண்ணாடி துண்டுகள் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் கண்ணாடித் துண்டுகளை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தார். கையில் ஏற்பட்ட காயத்தால் ஆறு தையல் போடப்பட்டது. மற்றபடி பெரிய அளவில் எதுவும் நடக்கவில்லை. நான் ஒரு பெண் சிங்கம். விரைவில் மீண்டு அதே பலத்துடன் வருவேன்’ என்று கூறியுள்ளார்.