தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 55 கோயில்களில் விரைவில் கும்பாபிஷேகம்: இந்துசமய அறநிலையத்துறை ஆய்வு


தூத்துக்குடி: தூத்­துக்­குடி, தென்­காசி மாவட்­டங்­களில் அற­நி­லை­யத்­துறையின் கீழ் உள்ள 55 கோயில்­களில் திருப்­பணி முடித்து, கும்­பாபி­ஷேகம் நடத்த மாநில கமிட்­டிக்கு இந்து சமய அறநிலை­யத்­துறை அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர். தமி­ழ­கத்தில் உள்ள கோயில்­களில் பழமை மாறாமல் திருப்­பணி செய்து அதன் பிறகு கும்­பா­பி­ஷேகம் நடத்­தப்­பட வேண்டும். எந்த காரணம் கொண்டும் பழ­மையில் மாற்றம் செய்து விடக் கூடாது. இதில் மிக கவ­ன­மாக இருக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்­த­ர­வின்படி தமி­ழக அரசு இந்துசமய அற­நி­லை­யத்­துறைக்கு உத்­த­ர­விட்­டு உள்­ளது. இதற்­காக சைவ மற்றும் வைண­வத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வல்­லுநர் குழுவை மாநில மற்றும் மண்­டல அளவில் அரசு அமைத்­துள்­ளது. மண்­டல அள­வி­லான குழு, 2 அல்லது 3 மாதத்­திற்கு ஒரு­முறை கூடி, 12 ஆண்­டு­கள் கழிந்தும் கூட கும்பா­பி­ஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் அனைத்து கோயில்களிலும் திருப்­பணிகளை மேற்கொண்டு கும்­பா­பி­ஷேகம் நடத்த ஏற்­பா­டு­களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் துாத்­துக்குடி இந்து சமய அற­நி­லை­ய­த்துறை இணை ஆணையர் அலு­வ­­ல­கத்தில் பழமை வாய்ந்த திருக்­கோ­யில்­க­ளுக்கு திருப்­பணி செய்து கும்­பா­பி­ஷேகம் நடத்துவது தொடர்பான மண்டல அள­வி­லான வல்­லுனர் குழு கூட்டம் நடந்தது. வல்­லுநர் குழு­வினர், தூத்துக்குடி, தென்காசி மாவட்ட கோயில்­களின் செயல் அலு­வ­லர்கள், கோயில் ஆய்வாளர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்­டுள்ளனர். இதில் கும்­பா­பி­ஷேகம் நடந்து 12 ஆண்­டுகள் முடிந்த தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்­டத்தில் உள்ள 55 திரு­க்­கோ­யில்­க­ளுக்கு திருப்­பணி செய்வது தொடர்பாகவும், அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாகவும் விரி­வாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கோயில்களில் திருப்­பணி மேற்­கொள்­ள­வ­தற்கு முன்­பு மண்­டல கமிட்டி ஆய்வு செய்து அந்த கோயில்களின் பழமை மாறாமல் எவ்வாறு திருப்பணிகள் மேற்கொள்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துருக்களை மண்­டல அளவிலான கமிட்டியினர் மாநில கமிட்­டிக்கு அனுப்­பி வைத்துள்ளனர். இதனை பரி­சீ­லனை செய்து மாநில கமிட்டி இசைவு தெரி­வித்த பிறகு திருப்­பணி வேலைகள் துவங்கும் என்று இந்துசமய அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ­தி­ருப்­பதி கோயில்­க­ளான திருப்புளியங்­குடி காசி­னி­வேந்த பெருமாள் கோயில், பெருங்­குளம் மாயகூத்தர் கோயில், இரட்டை திருப்­பதி அரவிந்­த­லோ­சனார் கோயில், ஸ்ரீ­வை­குண்டம் நதிக்­கரை சுப்­பி­ர­ம­ணி­ய­சு­வாமி கோயில், கால்வாய் கற்­­பக விநா­யகர் கோயில் உள்ளிட்ட கோயில்களும், தென்­காசி மாவட்டத்தை பொருத்தவரையில் வட­கரை ஆதிமணி­கண்ட சாஸ்தா கோயில், பண்­பொழி வேல்மலை பால­சுப்­பிரம­ணி­ய­­ சு­வாமி கோயில் உள்­ளிட்ட துாத்­துக்­குடி மாவட்­டத்தில் 35 கோயில்­க­ளிலும், தென்­காசி மாவட்­டத்தில் 20 கோயில்­க­ளிலும் சேர்த்து மொத்தம் 55 கோயில்­களில் கும்­பா­பி­ஷேகம் நடத்த திட்டமிட்டு மாநில குழுவிற்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இதனை தொடர்ந்து மாநில குழு ஆய்விற்கு பிறகு விரைவில் இந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலயத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு