Friday, June 28, 2024
Home » வெப்ப அலையின் தாக்கம் பேரிடராக அறிவிக்கப்படும்.. தூத்துக்குடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

வெப்ப அலையின் தாக்கம் பேரிடராக அறிவிக்கப்படும்.. தூத்துக்குடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

by Porselvi

சென்னை : சென்னை, புறநகர் பகுதிகளில் ரூ.36 கோடியில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு, நிவாரண மையங்கள் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் பின்வருமாறு..

*தூத்துக்குடியில் ரூ.17.50 கோடியில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும்.மழை வெள்ள பாதிப்பிற்குள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும்.பேரிடர் அல்லாத காலத்தில் பள்ளிக்கூடங்கள் ஆகவும், சமுதாயக் கூடங்களாகவும் செயல்படும்.

*வெப்ப அலையின் தாக்கத்தினை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும்.

*வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்; உரிய நிவாரணம் வழங்கப்படும்.

*காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக வனத்துறை அலுவலர்களுக்காக ரூ.15 கோடியில் உபகரணங்கள் வழங்கப்படும்.

*ரூ.13.25 கோடியில் 1000 முன்னெச்சரிக்கை அமைப்புகள் நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பு & அலை சீற்றம் போன்ற பேரிடர்களின் போது பொதுமக்கள், மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில், அபாய எச்சரிக்கை அறிவிப்பு & ஒலி எழுப்பும் கருவிகள் நிறுவப்படும்

*பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்காக படகு, மீட்பு வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் ரூ.105.36 கோடியில் வழங்கப்படும்.

*பேரிடரின்போது ரூ.13.25 கோடியில் அபாய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்படும்.

*மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ரூ.84 லட்சம் செலவில் 7 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

*1.07 கோடியில் கடலோர மாவட்டங்களில் உள்ள 4960 மீனவர்களுக்கும், 225 மீன்வளத்துறை அலுவலர்களுக்கும் பேரிடர் மீட்புப் பயிற்சி வழங்கப்படும்.

*பொம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களில் பல வருடங்களாக குடியிருந்து வரும் 854 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும்.

*மதுரை மற்றும் கோவையில் மண்டல அளவிலான நில அளவைப் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.

*நெல்லை ஊர்க்காடு கிராமத்தில் 1,800 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

*அரக்கோணம் வட்டத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் 500 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

*பட்டா மாற்றம் மற்றும் புல எல்லைகளை அளவீடு செய்தல் போன்ற சேவைகளை கண்காணித்து அவற்றின் தரத்தினை பேணும் பொருட்டு “தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம்” அமைக்கப்படும்

*மேலும் இணைய வழிச் சேவைகளின் புள்ளி விவரங்களை கண்காணிக்கும் வகையில், ‘Dashboard’ உருவாக்கப்படும்.பொதுமக்களுக்கு இணையவழிச் சேவைகள் விரைவாகவும், செம்மையாகவும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

*ரூ.2.10 கோடியில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு பேரிடர் மீட்பு அடிப்படைப் பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி, முதலுதவி பயிற்சி மற்றும் இடிபாடுகள், ஆழ்துளை கிணறு, சுரங்கம் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டவர்களையும், நீரில் மூழ்கியவர்களையும் மீட்பதற்கான 15 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

*ரூ.6.05 கோடியில் முதலுதவி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் தொடர்பான பயிற்சி பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைந்துள்ள 121 கிராமங்களில் வசிக்கும் 6000 தன்னார்வலர்களுக்கு அளிக்கப்படும்

*ரூ.2 கோடியில் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்புப் பணிகள் துறை மூலம் சென்னை & புறநகர் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களில் உள்ள 500 தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு & நிவாரணம் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

*பதிவுத்துறையில் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ் போன்று ஒரு புல எண்ணில் குறிப்பிட்ட காலத்தில் இணைய வழியில் நடந்த பட்டா மாற்ற விவரங்களை அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.

You may also like

Leave a Comment

eighteen + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi