Sunday, September 8, 2024
Home » தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

by Porselvi

சென்னை :தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், சேர்ந்தமங்கலம் கிராமம் கிறிஸ்துவின் பாசறை சபை அருகில் கடந்த 31.10.2023 அன்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிய விபத்தில் புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த திரு.லசிங்டன் (வயது 35) த/பெ.ஜேம்ஸ், மற்றும் அலெக்ஸ்சாண்டர் (வயது 34) த/பெ.திரு.தொம்பை ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்கள். மேலும் திரு.வசந்தன் ப்ரீஸ் (வயது 33) த/பெ. மிக்கேல் என்பவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், மூளைச்சாவு அடைந்த திரு.வசந்தன் ப்ரீஸ் என்பவரின் உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினர்களால் தானம் செய்ய முன்வந்ததன் அடிப்படையில் 6.11.2023 அன்று உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசு அவரது தியாகத்தை போற்றுகிறது.இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. இராஜன் என்பவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

nineteen + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi