இதனிடையே வாசன் கையிலும் இடுப்பிலும் வலி இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் கூறினார். அதன்படி, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிறை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், டிடிஎப் வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி செம்மல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.