இதில் காங்கிரஸ் உடன்படவில்லை. டெல்லியில் இருந்தபடி அசாமை ஆளுதல் கூடாது. அசாம் மாநிலத்தில் இருந்து தான் அசாமை ஆள வேண்டும். அனைத்து மாநிலங்களையும் காங்கிரஸ் சமமாக மதிக்கிறது. அதனால்தான் வட கிழக்கு பகுதியான மணிப்பூரில் இருந்து மேற்கில் உள்ள மும்பை வரை ஒற்றுமை நீதி யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை போலவே வட கிழக்கு மாநிலங்களும், அந்த மக்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது.
அந்த மாநிலத்தில் இன குழுக்களிடையே மோதல் வெடித்து போர் ஏற்பட்டுள்ளது போன்ற நிலை உருவாகியது. இத்தனை மாதங்கள் கடந்த பின்னரும் பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்கு ஒரு முறை கூட செல்லவில்லை. ஏனென்றால் பாஜவின் அரசியல் உண்மைத்தன்மை வெளிச்சமாகி விடும் என்பதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது’’ என்றார். இதற்கிடையே ஜோர்காட்டில் அனுமதிக்கப்பட்ட வழியில் இருந்து வேறு ஒரு வழியாக சென்றதற்காக யாத்திரையின் தலைமை அமைப்பாளர் கே.பி.பைஜூ மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.