இதை தொடர்ந்து அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு முழு ஆதரவு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த நிலையில், ட்ரம்பிற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பிஎஸ்சி நிறுவனத்திடம் ஒவ்வொரு மாதமும் 375.80 கோடி ரூபாய் நிதி வழங்க அவர் முன்வந்துள்ளார். இதனிடையே ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த சில அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பத்திற்கு பின் மாநாட்டிற்கு வந்த ட்ரம்பிற்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரமாக கரவொலி எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இந்த மாநாட்டிற்கு பின்னர் ஒகியோ மாகாணத்தின் சென்ட் உறுப்பினர் ஜே.டி.வன்செ துணை அதிபராக போட்டியிடுவார் என்றும் குடியரசு கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.