உண்மையாகிய ‘ரமணா’ படத்தின் வசனம்: மறைந்த விஜயகாந்த்தின் வசனங்கள் இணையத்தில் வைரல்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி..!!

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் மரணத்தால் தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். தொடர்ந்து தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கேப்டன் எழுந்து வாருங்கள் என்று ேகாஷமிட்டவாறே தொடர்ந்து கதறி அழுவது பார்ப்போர் மனதை கரையச் செய்வதாக உள்ளது. இதற்கிடையில் விஜயகாந்த் குறித்த நினைவலைகளை தற்போது பல்வேறு தரப்பினரும் வலைதளங்களில் கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ரமணா படத்தில் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் விஜயகாந்த்தை பார்த்து பேசும் வசனங்கள் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது. ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன். குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன். ஊரே அழுதா நல்ல தலைவன். உனக்காக நாடே அழுவுதுய்யா. என்ற வசனம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related posts

மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தை நாடிய பெண் ஊழியர்

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு