திரிபுரா காங். தலைவர் அதிரடி நீக்கம்

அகர்தலா: திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்தவர் பிலால் மியா. இவர் ஆளும் பாஜ உடன் தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் அக்கட்சியில் சேருவார் என தகவல் வெளியாகின. அமைச்சர்கள் ரத்தன் லால் நாத், சுஷாந்த சவுத்ரி ஆகியோர் மியாவை செபாகிஜலா மாவட்டத்தின் சோனமுரா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்குவதாக மாநில காங்கிரஸ் தலைவர் அஷிஷ் குமார் சகா தெரிவித்தார்.

Related posts

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு