திருச்சி: திருச்சி அருகே நிதி நிறுவனம் கந்துவட்டி கொடுமை செய்வதாக கூறி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. ஜோதி என்பவர் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்தியும் நிதி நிறுவனம் அபராத வட்டி ரூ.19 ஆயிரம் கேட்டதாக புகார் அளித்துள்ளனர்.