கனிமொழி குறித்து அவதூறு திருச்சி பாஜ பிரமுகர் கைது

திருச்சி: திமுக துணை பொது செயலாளரான கனிமொழி எம்பி குறித்து சமூக வலைதளங்களில் திருச்சியை சேர்ந்த ஒருவர் அவதூறு கருத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் வட்ட திமுக செயலாளர் ஹரிஹரன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் உறையூர் சத்யா நகரை சேர்ந்த பாஜ பிரமுகரான சீனிவாசனை (66) நேற்று கைது செய்தனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு