திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் 8 பள்ளிகளுக்கு மற்றும் ஒரு கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் நடத்திய சோதனை அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில், நேற்றும் திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரி, திருச்சி ஏர்போர்ட் மற்றும் ஈரோட்டில் உள்ள 3 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திருச்சி ஏர்போர்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு