திருச்சி மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை

திருச்சி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சி மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மக்களுக்கான திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசின் ஒரு திட்டத்தில் முறைகேடு நடந்தால் உயரதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு