திருச்சி அருகே ஆள்மாறாட்டம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி: ஒருவர் பிடிபட்ட நிலையில் 6 பேர் தப்பியோட்டம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறட்டம் செய்து பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் 6 பேர் தப்பியோடிவிட்டனர். இருங்கலூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவர் தனது நிலத்தை காஜா நகர் சங்கர் என்பவருக்கு பவர் ஏஜெண்ட் எழுதி கொடுப்பதாக 6 பேருடன் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது சார் பதிவாளர் கோகிலா ஆரோக்கிய சாமியின் ஆதார் ஆட்டையை சரிபார்க்கும் பொழுது அதில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது ஆரோக்கியசாமி உடன் வந்திருந்த 6 பேரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் ஆரோக்கியசாமி இல்லை என்பதும் அவர் பெயர் சண்முக சுந்தரம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சண்முக சுந்தரத்திடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு