அப்போது சார் பதிவாளர் கோகிலா ஆரோக்கிய சாமியின் ஆதார் ஆட்டையை சரிபார்க்கும் பொழுது அதில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது ஆரோக்கியசாமி உடன் வந்திருந்த 6 பேரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் ஆரோக்கியசாமி இல்லை என்பதும் அவர் பெயர் சண்முக சுந்தரம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சண்முக சுந்தரத்திடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனர்.