தமிழ்நாடு முதல்-அமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இதற்காக இன்று (07.07.2024) திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வருகை தந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்ல இருப்பதால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே நேற்று (06.07.2024) மாலை 6 மணி முதல் மறுநாள் (07.07.2024) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.