இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், ‘இதுபோன்று ஏற்கனவே ஓரிரு முறை நடந்திருக்கிறது. புதிதாக பணிக்கு வரும் வீரர்களுக்கு மூத்த அதிகாரிகள் யார் என்பது குறித்து அறிமுகம் செய்து வைக்க வேண்டியது மத்திய தொழில்பாதுகாப்பு படையினரின் பணி. இந்த சம்பவம் தற்போது விமானிகள் வௌியே வரும் நுழைவாயிலில் நடைபெற்றது. தற்போது நடந்த சம்பவம் வேண்டுமென்றே நடந்ததா? அல்லது அவர் யார் என்பது தெரியாமல் நடந்ததா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தொழிற்பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த வீரரை வேறொரு பிரிவுக்கு மாற்றியதாக கூறுகின்றனர். ஆனால் விமான நிலைய இயக்குநர் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் சோதனை முடியும்வரை காத்திருந்து அதன்பின் தன்னுடைய அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறார்’ என்றனர்.