நீடாமங்கலம், டிச. 31: நீடாமங்கலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் பாபு தலைமையிலும், செயலாளர் ரவிச்சந்திரன் பொருளாளர் சண்முகம் முன்னிலையிலும் நடைபெற்றது. நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் தலைவர் பத்ம ராமன் , ஒருங்கிணைப்பாளர் நேரு , துணைத் தலைவர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொறியாளர் சிதம்பரம்,முரளி,சங்கர் இளவழகன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீடாமங்கலம் கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டு நம்மாழ்வார், விவசாயத்திற்காக ஆற்றிய சீரிய பணிகளை பற்றியும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் பேசி அஞ்சலி செலுத்தினர்.