சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்கை கைவிட்டு உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகை நேரத்தில் மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளை மறித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், திண்டிவனம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.