அதிமுக ஆட்சியின் கடன் சுமை, கொரோனா நெருக்கடி, நிதி பற்றாக்குறை என பல்வேறு கட்டங்களை கடந்து புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சில மாநிலங்களில் இரண்டு மூன்று மாதங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் முறையாக வழங்கப்படவில்லை. நமது மாநிலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து கழகத்தில் போதுமான டிரைவர்கள், கண்டக்டர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த துறை எந்த காரணத்தினாலும் தனியார் மயமாக்கப்படாது. அதனால்தான் 7500 பஸ்கள் புதிதாக வாங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.