போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பணி தேர்வு முடிவு நாளை வெளியீடு

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பணி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தேர்வு எழுதியவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் www.arasubus.tn.gov.in வழியாக இணையதளத்தில் 27ம் தேதி(நாளை) காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும். விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உபயோகித்து ஓஎம்ஆர் விடைத்தாளை சரிபார்த்துக் கொள்ளலாம். இதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பின் போது கல்வி தகுதி, வயது, சாதி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம், உடல் தகுதி ஆகியவற்றில் தகுதியானவர்கள் மட்டுமே ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.

Related posts

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு