சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை இணை
ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க தொழிற்சங்கம் வலியுறுத்தியது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பு பெறப்பட்டது.