திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரா.சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் கடம்பத்தூர், அகரம், பிஞ்சிவாக்கம், புதுமாவிலங்கை, புதுமாவிலங்கை கண்டிகை போன்ற பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, போலீசார் புதுமாவிலங்கை சுடுகாடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கூவம் ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அந்த பைக்கை பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.