போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திய ஆம்னி பேருந்துக்கு அபராதம்

அம்பத்தூர்: கோயம்பேடு மார்க்கெட் அருகே இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்பட்டு வந்தது. இதன்காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரம் நேற்றுமுன்தினம் இரவு ஆய்வு செய்தார். அப்போது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்துக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் கூறுகையில், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம்.
கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆம்னி பேருந்துகள் வரிசையாக நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுபோல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்