Tuesday, September 17, 2024
Home » போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு … அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு … அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

by Porselvi

சென்னை : போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இதில் 50 சதவீத வருங்கால வைப்புத் தொகை உட்பட பணப்பலனின் ஒரு பகுதியை வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதத்தை பரிசீலித்து ரூ.38.73 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் – ரூ.5.8 கோடி, சேலம் ரூ.3.6 கோடி, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.4.3 கோடி ஒதுக்கப்பட்டது. கும்பகோணம் ரூ.8 கோடி, மதுரை – ரூ.3.2 கோடி, நெல்லை -போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.2.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi