சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மார்ச் 6ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15வது ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டம், உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையிலான பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.