திண்டுக்கல்: திண்டுக்கல், வேடபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். (21). இவர் திருநங்கையாக மாறி, தனது பெயரை மாயா என மாற்றி கொண்டார். இதேபோல் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (24). இவர் திருநம்பியாக மாறி, தனது பெயரை கணேஷ் என மாற்றி கொண்டார். இருவருக்கும் நேற்று காலை திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் திருநங்கையர்களால் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.