மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்களுக்கு மட்டுமே புதிய ஓய்வூதியம் பெற தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் 40-45 வயது உள்ளவர்களின் பணி காலம் கணக்கிடும்போது புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகளை சிறப்பினமாக கருதி ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் 15 ஆண்டுகள் என நிர்ணயித்து, ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.