அரசு போக்குவரத்து கழகங்களின் 5 மேலாண் இயக்குநர்கள் பணியிட மாற்றம்


சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் 5 பொது மேலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வந்த சிங்காரவேலு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) மேலாண் இயக்குநராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராகவும், அரசு போக்குவரத்து கழகம் (சேலம்) மேலாண் இயக்குநர் பொன்முடி அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) மேலாண் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன், அரசு போக்குவரத்து கழகம் (சேலம்) மேலாண் இயக்குநராகவும், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் தசரதன் திருநெல்வேலி கோட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்துத் துறை பிறப்பித்த மற்றொரு உத்தரவில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் முதுநிலை துணை மேலாளர் ஆர்.இளங்கோவன் தற்போது அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) புதுக்கோட்டை மண்டல பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் மீண்டும் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு

செப் 09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சொல்லிட்டாங்க…