தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநர் பிரதாப், சிறப்பு திட்ட செயலாக்கத் திட்ட துணை செயலாளராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் கலால் வரித்துறை ஆணையராகவும், அந்த பதவியில் இருந்த ரத்னா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்பு செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வணிக வரி இணை செயலாளராக உள்ள காயத்ரி கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்ட சிறப்பு நிர்வாக அதிகாரியாகவும், மனித உரிமை ஆணைய செயலாளரான விஜய கார்த்திகேயன், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராகவும், விவசாயத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த சிரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு