நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் தலைமைப்பொறியாளர்கள் பணியிடமாற்றம்: அரசாணை வெளியீடு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் தலைமை பொறியாளர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-2 தலைமை பொறியாளரான சாந்தி, நெடுஞ்சாலைத்துறையின் முதன்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் முதன்மை இயக்குநராக இருந்து குமார் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-2ன் தலைமைப் பொறியாளராகவும், தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளரான பாலமுருகன் திட்டங்கள் தலைமை பொறியாளராகவும், நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் தலைமைப் பொறியாளர் கீதா தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளராகவும், திட்டங்களில் தலைமைப் பொறியாளராக முருகேசன் நபார்டு மற்றும் கிராமச் சாலைகளின் தலைமைப்பொறியாளராகவும், திட்டம் வடிவமைப்பு மற்றும் ஆய்வு தலைமைப்பொறியாளர் இளங்கோ பெருநகர தலைமைப் பொறியாளராகவும், பெருநகர தலைமைப் பொறியாளரான சேகர் திட்டம் வடிவமைப்பு மற்றும் ஆய்வு தலைமைப் பொறியாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை..!!

2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா புறப்பட்டார்..!!

உ.பி. 121 பேர் பலி சம்பவம்.. ஹத்ராசில் நெரிசல் ஏற்பட, நச்சு திரவம் தெளிக்கப்பட்டதா?: போலே பாபா தரப்பு வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்!!