இந்த இரு விசைப்படகுகளிலும் சென்ற மீனவர்கள் 22 பேரும் இலங்கை கடல் பகுதி அருகே நேற்று (5ம் தேதி) மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி தருவைகுளத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த 22 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் 22 மீனவர்களும் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.