ஒவ்வொரு பகுதிக்கும் 2 அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு பணம் பற்றாக்குறை, என்னால் நிக்க முடியாது என்று சொன்னார். என்னால் செலவு செய்ய முடியாது என்றும் சொன்னார். எப்படிப்பட்ட வேட்பாளர் பார்த்துக்குங்க. நான்தான் யோக்கியன் என பேசி மக்களை ஏமாற்றி, இப்ப ஆளே காணோம். கடைசியில தேர்தல் வருகிறதால, 3, 4 மாசமாக மருத்துவ முகாம், சேவை பண்றேன், மக்களோடு இருக்கிறேன் என்று ஏமாத்திக்கிட்டு இருக்கார்.
‘பணமில்லை எனக்கு வேண்டாம் சீட்’ என சொன்னார். எடப்பாடியார் கூப்பிட்டு, ஐயா நீ நில்லு, எல்லாம் மாவட்ட செயலாளர் வீரமணி பார்த்துப்பார், அவருக்கு எப்படி, என்ன பண்ணா ஜெயிக்கணும்னு தெரியும்னு’ சொன்னார். மைக் இருக்கிறதால என்ன பேச முடியல. அதிமுகவினர் முதுகில் குத்திவிட்டாங்க என சொல்கிறார். வரப்போற தேர்தல்ல எப்படி குத்தப்போறோம் நீ பாரு. நீ சமூதாயத்தை முன்னிறுத்தி ஓட்டு வாங்கி போயிட்டு, அமைச்சராகி அங்க உட்கார்ந்து, மருத்துவக்கல்லூரி வாங்க பார்க்கிறாயா, நன்றி மறந்து விட்டு பேசுகிறார். உயிரை கொடுத்து வேலை செய்தோம்.
நீ பப்ளிக் கூட்டத்தில் பேசுகிறாய், உனக்கு அசிங்கமா இல்ல, உனக்கு நன்றி இருக்குமா, நீ துரோகி இல்லயா, இரட்டை இலைக்கு துரோகம் பண்ற. இந்த இரட்டை இலையினால்தான் உன்னை உலகத்துக்கே தெரியும். புரட்சி தலைவர் எம்ஜிஆரை ஏமாற்றி நீ சம்பாதிச்ச, யாரைப் பார்த்து முதுகில் குத்தி விட்டாய் என்கிறாய்? நீ தான் துரோகி, நன்றி மறந்து பேசுகிறாய் உன்னுடைய பாச்சா பலிக்காது வேஷம் கலையும்.
இவ்வாறு அவர் பேசினார்.