இதனால், ரயில்வே பயனாளர்கள் ஒருங்கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரயில்வேயின் அனைத்து சேவைகளையும், ஒரே செயலியில் பயன்படுத்தும் வகையில், ‘சூப்பர் மொபைல் ஆப்’ எனும் மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘புதிதாக உருவாக்கப்படும் சூப்பர் மொபைல் ஆப் மூலம் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற முடியும். டிக்கெட் ரத்து செய்த அடுத்த 24 மணி நேரத்தில் பணம் திரும்ப பெற உதவும். பி.என்.ஆர்., சரிபார்த்தல், ரயில்கள் செல்லும் நிகழ்விடத்தை பார்த்தல், உணவு ஆர்டர், விமான டிக்கெட் முன்பதிவு, ஓய்வறைகள், கால்டாக்சி முன்பதிவு வசதிகளையும் பெறலாம்.
இதேபோல், சரக்கு பார்சல் அனுப்புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும். இந்த மொபைல் போன் செயலியை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் சூப்பர் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படும். இந்த ஆப் பயன்பாட்டிற்கு வரும்போது, பயணிகள் அனைத்து வசதிகளையும் ஒரே செயலியில் எளிதில் பெறலாம்’ என்றனர்.