சென்னை :ரயில்வேயில் பணி வழங்கக் கோரி 50-க்கும் மேற்பட்டோர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்து பல ஆண்டுகள் ஆகியும் பணி வழங்காததை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ரயில்வேயில் பணி வழங்கக் கோரி சென்னை சென்ட்ரல், டெல்லியில் ஏற்கனவே பல கட்ட போராட்டம் நடத்தியிருந்தனர்.