ஆவடி அருகே இந்துக்கல்லூரி சந்திப்பில் வந்தபோது கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடைமேடையில் அச்சுறுத்தும் வகையில் வீசியதோடு, கோஷங்கள் சத்தமாக எழுப்பினர். அதுமட்டும் இன்றி ரயில் மேற்க்கூரையின் ஆபத்தான நிலையில் தொங்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதன் அடிப்படையில் 5 க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குறிப்பிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
கடந்த காலங்களில் புறநகர் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் அதிகரித்ததனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி காட்சிகள் பொருத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் இருந்த நிலையில் மாணவர்களின் இந்த செயலால் ரயில் பயணிகள் அதிர்ச்சியுற்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.