புதுடெல்லி: ரயில்வேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் இடிக்கெட் முன்பதிவு தொடர்பான புகாரில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டது. டெல்லி, உபி, பீகார், குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 12 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது சட்டவிரோத மென்ெபாருள் மூலம் படுக்கைவசதி டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த இடங்களில் இருந்த டிஜிட்டல் ஆவணங்கள், மொபைல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.