சென்னை: சென்னை சாலைகளில் பகலில் 40 கி.மீ, இரவில் 50 கி.மீ என நிர்ணயிக்கப்பட்ட வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை, வாகனங்கள் செல்லும் சராசரி வேகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டம் வகுத்துள்ளது. சாலைகளில் உள்ள கருவி மூலம் ஒரு வாரத்திற்கு வாகனங்களின் வேகம் கணக்கிடப்பட்டு, சராசரி வேகம் நிர்ணயிக்கப்பட உள்ளது; அதன் பிறகே அபராதம் விதிக்கும் செயல்பாடு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.