இக்கூட்டத்தில், சென்னை பெருநகரில் உள்ள வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், வணிக வளாகங்களின் வாகன நிறுத்தும் இடங்களை ஒழுங்குபடுத்தவும், தேவைக்கேற்ற வாகன நிறுத்தும் இடங்களை உருவாக்கவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரிய வணிக வளாகங்கள் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அந்தந்த வணிக வளாக உரிமையாளர்களே தேவைக்கேற்ற ஊழியர்களை நியமித்து, குறிப்பாக வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்தை சீர்செய்யும் ஊழியர்களுக்கு பிரிதிபளிக்கும் உடைகள் (Reflector Jackets) வழங்கி, போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சென்னை பெருநகரில் உள்ள வணிக வளாகங்களுக்குள் செல்லக்கூடிய வாகனங்கள் நுழைவாயில் (Entry) மற்றும் வெளியே (Exit) செல்லும் பாதையை ஒரே இடத்தில் இல்லாமல், முன்பகுதியில் வாகனங்களின் நுழைவாயிலாகவும் (Entry) மற்றும் பின்பகுதியில் வாகனங்கள் வெளியே செல்லும் படியாகவும் (Exit) வணிக வளாக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல வணிக வளாகங்களுக்கு வரக்கூடிய வாகனங்கள் அதிகமடைந்தால், வணிக வளாக உரிமையாளர்களே தற்காலிக வாகன நிறுத்துமிடம் கண்டறிந்து, சாலையின் முன்பு எவ்வித போக்குவரத்து நெரிசலின்றி வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் இரா. லலிதா, பெருநகர சென்னை காவல் போக்குவரத்து இணை ஆணையர் ந.மா.மயில்வாகனன், முதுநிலை திட்ட அமைப்பாளர் டி.சபாபதி, போக்குவரத்து காவல்துறை அலுவலர்கள் மற்றும் சி.எம்.டி.ஏ அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.