சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் அருகே போக்குவரத்து பெண் காவலரை கல்லால் தாக்கிய நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். போக்குவரத்துக்கு நாகராஜ் இடையூறு ஏற்படுத்தியதால் காவலர் குமுதா எச்சரித்தபோது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். காயமடைந்த பெண் காவலர் குமுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகராஜை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.