நெல்லை : போக்குவரத்து விதிகளை மீறியதாக நெல்லை உதவி காவல் ஆணையர் சுப்பையாவுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவழிப்பாதையில் சென்றதாக நெல்லை டவுன் காவல் உதவி ஆணையரின் வாகனத்துக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுநர், உதவி ஆணையர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.