அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் மேலப்பிடாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அதற்காக டிராக்டர் பேரணி தொடங்க ஏராளமான விவசாயிகள் டிராக்டருடன் வந்த நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் அனுமதி மறுத்து பேரணிக்கு தடை விதித்தனர். இதையடுத்து விவசாயிகள் விவசாய விளை நிலத்தில் நின்று ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கமல்ராம், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட கவுரவ தலைவர் கருணைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.