டிராக்டர் மோதி விவசாயி பலி

திருப்போரூர்: ஆலத்தூர் – சிறுதாவூர் சாலையில் ஸ்கூட்டியில் சென்றுக்கொண்டிருந்தபோது, டிராக்டர் மோதியதில் விவசாயி பரிதாபமாக பலியானார். திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவர், விவசாயி மற்றும் திமுக நிர்வாகி. கடந்த 23ம் தேதி ஸ்கூட்டியில் ஆலத்தூர் – சிறுதாவூர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் வந்த டிராக்டரும், ஸ்கூட்டியும் நேருக்கு நேர் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த குப்புசாமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்றுவந்த குப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்போரூர் போலீசார், குப்புசாமியின் உடலை மீட்டு, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு